காலாவதி பாஸ்போர்ட்: சோபியாவுக்கு போலீஸ் எச்சரிக்கை
நேற்று தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தமிழிசை-சோபியா மோதல் சம்பவம்தான். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சோபியா பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
ஜாமீன் பெறும்போது அவர் அசல் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்காமல் காலாவதியான பழைய பாஸ்போர்ட்டை சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து சோபியாவின் அசல் பாஸ்போர்ட் உடன் வரும் 7-ம் தேதி நேரில் ஆஜராக அவரது தந்தை சாமிக்கு தூத்துக்குடி புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையம் சம்மன் அனுப்பியுள்ளது
தமிழிசை உடனான வாக்குவாதத்தின் போது காலாவதியான பாஸ்போர்ட்டை வைத்திருந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சியை பாசிச கட்சி என்று குற்றஞ்சாட்டும் பெண், காலாவதியான பாஸ்போர்ட்டை சமர்ப்பித்தது சரியா? என்ற வாதம் தற்போது எழத்தொடங்கியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.