காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்தது: பள்ளிகள் இன்று திறப்பு
காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை முதல் பள்ளிகளுக்கு செல்ல மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 12ம் தேதி முதல் 23ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடந்த நிலையில் அக்டோபர் 2வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றுடன் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.
மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும், அனைத்து மாணவர்களும் இன்று விடுமுறை எடுக்காமல், பள்ளிகளுக்கு வர வேண்டும்’ என, பள்ளிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், மாணவர்களின் பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் ‘மாணவர்கள், இன்று பள்ளிகளுக்கு கட்டாயம் வர வேண்டும்’ என நேற்றே தகவல்கள் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.