காற்று இல்லாத மெரீனா கடற்கரை: பொதுமக்கள் ஏமாற்றம்

சென்னை மெரினா கடற்கரைக்கு காற்று வாங்க வந்த மக்கள் காற்று வீசாத காரணத்தால் ஏமாற்றம் அடைந்தனர்

சென்னை மெரீனா கடற்கரை என்றாலே ஜிலுஜிலு காற்றுதான் முக்கிய அம்சம். ஆனால் நேற்று ஃபனி புயல் திசை மாறியதன் காரணமாக மெரீனா கடற்கரையில் சுத்தமாக காற்றே வீசவில்லை. எனவே நேற்று மெரினாவுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்

மேலும் இன்றும் நாளையும் கடுமையான வெயில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் அவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Leave a Reply