காதலியுடன் வந்ததால் தாயார் அதிர்ச்சி

உபி மாநிலத்தில் காய்கறி வாங்க சென்ற இளைஞர் ஒருவர் காதலியை திருமணம் செய்து கொண்டு மனைவியுடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று காய்கறி வாங்குவதற்காக தனது அம்மாவிடம் காசு வாங்கிவிட்டு கடைக்கு சென்றார். சில நிமிடங்கள் கழித்து அவர் வந்தபோது ஒரு பெண்ணுடன் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் இந்தப் பெண் யார் என்று கேட்க, அவள் என் மனைவி என்றும் எங்களுக்கு திருமணமாகி விட்டது என்றும் மகன் கூறியதால் அவரது அம்மா அதிர்ச்சி அடைந்தார்

இதனை அடுத்து காவல்துறையில் புகார் அளித்த அம்மா, இதுகுறித்து விசாரணை செய்யுமாறு கேட்டு கொண்டார். போலீசார் அந்த இளைஞனிடம் விசாரித்தபோது காய்கறி வாங்கச் சென்ற இடத்தில் இந்த பெண்ணை பார்த்தவுடன் பிடித்து விட்டதாகவும் உடனே திருமணம் செய்து கொண்டதாக கூறினார். ஆனால் போலீசார் இதனை நம்பவில்லை. இந்த நிலையில் இருவரும் ஏற்கனவே காதலித்ததாகவும் ஊரடங்கால் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ள முடியவில்லை என்பதால் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply