shadow

காதல் திருமண கொள்கையை கைவிட்டார் சிம்பு. பெண் பார்க்கும் படலத்தை தொடங்கிய டி.ராஜேந்தர்
simbu
தொடர் தோல்வி படங்கள், பீப் பாடல் விவகாரம் ஆகியவை காரணமாக நொந்து நூலாகி இருக்கும் நடிகர் சிம்புவுக்கு திருமணம் ஆனால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் என ஜோசியர் கூறியதால் அவருக்கு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் சிம்புவின் திருமண அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

காதல் தோல்விகள், பட தோல்விகள், பீப் பாடல் விவகாரத்தில் மன அழுத்தக் ஆகியவைகளில் இருந்து சிம்புவை மீட்க அவரது பெற்றோர்கள் அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாகவும் இதனால் காதல் திருமணம் மட்டுமே செய்வேன் என்று உறுதியாக இருந்த சிம்பு தற்போது பெற்றோர்கள் சொல்லும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் பெற்றோர் மற்றும் குடும்ப நண்பர்களுடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது சிம்புவின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் எழுந்துள்ளது. அந்த இடத்தில் பெற்றோர்கள் சிம்புவை சீக்கிரமாகவே திருமணம் செய்துகொள்ள வற்புறுத்த, சிம்புவும் தனக்கு பெண் பார்க்குமாறு பெற்றோர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கு சிம்பு தனது பெற்றோர்களிடம் ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். அதாவது, பெற்றோர்கள் பார்க்கும் பெண் தனக்கு பிடிக்கவேண்டும். அதேநேரத்தில் அந்த பெண்ணுக்கும் தன்னை பிடிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கிவிட்டதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் சிம்புவுக்கு திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply