காணும் பொங்கலையொட்டி சிறப்பு பேருந்துகள்: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்
பொங்கல் திருநாளின் முக்கிய நிகழ்வான காணும் பொங்கல் நாளை நடைபெறவுள்ளது. பீச், பார்க் உள்ளிட்ட இடங்களில் நாளை ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் பொதுமக்கள் கூட வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை மட்டுமின்றி அதன் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பொதுமக்கள் இந்த சிறப்பு பேருந்துகளை பயன்படுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.