காணாமல் போன விடைத்தாள் 3 மாதங்களுக்கு பின் கிடைத்த மர்மம்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் கட்டு ஒன்று திடீரென காணாமல் போய் அந்த விடைத்தாள்கள் மூன்று மாதம் கழித்து தற்போது கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த தேர்வு விடைத்தாள்கள் கட்டு மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு பேருந்து ஒன்றின் மூலம் கொண்டுவரப்பட்டது

இந்த நிலையில் திடீரென ஒரே அந்த தனியார் கல்லூரியின் ஒரு விடைத்தாள் கட்டுகளில் ஒரே ஒரு கட்டு மட்டும் காணாமல் போவதாக அறிவிக்கப்பட்டது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் தற்போது காணாமல் போன அதே பேருந்த்ஹில் மூன்று மாதம் கழித்து அந்த விடைத்தாள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் விசாரணை நடத்தி வருகிறார். கிடைக்கப்பெற்ற விடைத்தாள் இன்று திருத்தம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மூன்று மாதம் கழித்து தொலைந்த பேருந்திலேயே விடைத்தாள் கட்டு கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply