காங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது – ப.சிதம்பரம்
காங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டதாக முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்..
இன்று கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய ப.சிதம்பரம், வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஒரு தலைவர் கூட கிடையாது; அதனால் காங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது என்றும், சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் அல்ல என்றும் படேல் காங்கிரஸ் தலைவர் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை இறக்குமதி செய்யும் காங்கிரஸ் கட்சி, ஆர்.எஸ்.எஸ், குறித்து பேசுவதற்கு தகுதியில்லாத கட்சி என்றும் இதற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.