காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து அம்மாநில முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ‘ கூட்டணிக்கு காங்கிரஸ் முயற்சிப்பது காலம் கடந்த செயல் என்றும், காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைக்க இனி வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய், பேச்சுவார்த்தைகளிலேயே காங்கிரஸ் கட்சி அதிகப்படியான நேரத்தை வீணடித்து விட்டதாக தெரிவித்தார். டெல்லியில் கூட்டணி தேவையா இல்லையா என்பது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸ் தலைவர்களின் பிடிவாதமே கூட்டணி ஏற்படாததற்குக் காரணம் என கோபால் ராய் தெரிவித்தார். டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடவுள்ளது

Leave a Reply