சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

7.5% உள்ஒதுக்கீடு மசோதாவில் கவர்னர் கையெழுத்திட தாமதமானதை அடுத்து தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது

Leave a Reply