கள்ளத்தொடர்பே தவறில்லை என்றால் ‘மீடூ’ எப்படி தவறாகும்?
கள்ளத்தொடர்பு என்பது தண்டிக்கப்பட வேண்டிய ஒரு குற்றமல்ல என சமீபத்தில் தீர்ப்பு வந்திருக்கும் நிலையில் மீடூ எப்படி தவறாகும் என திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருமணத்துக்கு பின்னர் ஒரு ஆண் அல்லது பெண் தங்களுகு பிடித்தவர்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தால் கூட தவறில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், மீ டூ விவகாரம் எப்படி தவறாகும் என திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற “எவனும் புத்தனில்லை” என்ற திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஒரு சின்மயியால் இந்த சமூகத்தில் உள்ள ஆண்களை மாற்றிவிட முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.