shadow

கலிபோர்னியா காட்டுத்தீயிக்கு அதிகாரிகளே காரணம்: டிரம்ப்

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய காட்டுத்தீ என்று கூறப்படும் கலிபோர்னியா காட்டுத்தீயால் இதுவரை 70 பேர்களுக்கும் அதிகமாக பலியாகியுள்ளதாகவும், இந்த காட்டுத்தீயால் பல மில்லியன் மதிப்புள்ள மரங்களும் மற்ற பொருட்களும் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

சுமார் 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்த காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் பார்வையிட்டார்.

பெரும் சேதங்களை ஏற்படுத்திய இந்த காட்டுத்தீயிக்கு அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என டிரம்ப் ஆத்திரத்துடன் கூறியுள்ளார். இதனால் வன அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply