மும்பையைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் மும்பை காவல் நிலையத்திற்கு வந்து ஒரு பேப்பர் மற்றும் பேனா வேண்டுமென கேட்டார். அவரிடம் காவல்துறையினர் பேப்பர், பேனா கொடுத்தபோது அதில் தான் ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அவருடன் தனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சண்டை போட்டதாகவும் இந்த சண்டையில் மன அழுத்தத்திற்கு ஆளாகி தனது லிவிங் டுகெதர் பார்ட்னரை குத்தி கொலை செய்து விட்டதாகவும் எழுதிக் கொடுத்து தன்னை கைது செய்யும்படி கூறியுள்ளார்

மேலும் தனது வீட்டின் சாவியையும் அவர் காவல்துறையினரிடம் கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறை சாவியை வாங்கி அவர் கூறிய வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு ஒரு கர்ப்பிணிப் பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்தார்.

இதனை அடுத்து அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Leave a Reply