shadow

கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி: 80 பேர்களுக்கு சிகிச்சை

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் ஹனுர் தாலுகாவில் சுல்வாடி கிராமத்தில் அமைந்துள்ள மாரம்மன் கோவிலில் கடந்த வெள்ளி அன்று சிறப்பு பூஜைக்கு நடந்தது. இந்த பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களுக்கு சில நிமிடங்களில் திடீரென வாந்திபேதி ஏற்பட்டது. உடனடியாக 100க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி 2 பெண்கள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னும் சிலர் அபாயகட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து கர்நாடக முதலமைச்ச்சர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுளது என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply