கரையை கடக்கின்றது ஃபானி புயல்!
ஃபானி புயல் கரையை கடக்கத் தொடங்கியதால் ஒடிசாவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டுகிறது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஃபானி புயல் கரையை கடந்து வருவதால் அம்மாநிலத்தின் புரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும் புயல் காரணமாக ஒடிசாவில் கனமழையுடன், அதிக வேகத்தில் காற்று வீசி வருவதாக ஒடிசா வானிலை மையம் தெரிவித்துள்ளது
ஃபோனி புயல் கரையை கடப்பதால் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம், பீமுனிபட்டினம் ஆகிய 2 துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், விசாகப்பட்டினம், கங்காவரம் ஆகிய 2 துறைமுகங்களில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.