shadow

கருணாநிதி மறைவு எதிரொலி: திருவாரூர் தொகுதி காலி என அறிவிப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானதை அடுத்து கடந்த சட்டசபை தேர்தலில் அவர் வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது.

கருணாநிதியின் மறைவு குறித்த தகவல் சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கருணாநிதி போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் நேற்று (10-ந் தேதி) அறிவிப்பாணை வெளியிட்டார். அந்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எனவே அந்தத் தேதியில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் இனி மேற்கொள்ளும். எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியானதாக சமீபத்தில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது, நினைவுகூரத்தக்கது

Leave a Reply