கருணாநிதிக்கு வழங்கப்பட்ட சலுகை திடீர் ரத்து: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி
முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி உள்பட 4 முன்னாள் முதல்வர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அரசியல் தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பை குறைக்கும்படி கமாண்டோ படைப் பிரிவினர் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து இதனை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம், திமுக தலைவரும் முன்னாள் தமிழ்க முதல்வருமான கருணாநிதி, உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், அஸ்ஸாம் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர்கள் தருண்கோகய், லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது குண்டு துளைக்காத வாகனம், 2 பாதுகாப்பு வாகனங்கள், 40 பாதுகாப்பு கமாண்டோ படை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.