கருணாநிதிக்கு கங்கையில் இரங்கல் தெரிவித்த பொதுமக்கள்
திமுக தலைவர் கருணாநிதி தான் வாழ்ந்த காலத்தில் இந்து மதங்களின் நம்பிக்கை அற்றவராக இருந்தாலும், அவர் கவலைக்கிடமாக இருந்தபோதும், அவரது மறைவிற்கு பின்னரும் திமுக தொண்டர்கள் வழிபட்டது இந்து கடவுளைத்தான்
அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.
குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள கங்கை நதிக் கரையில் ஆர்த்தி காண்பித்து, கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கருணாநிதியின் புகைப்படத்தை கையில் ஏந்தி வணங்கினர். ஆர்த்தி நிகழ்வு நிறைவடைந்ததும் விளக்குகள் ஏற்றப்பட்டு நதிகரையில் விடப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.