கராத்தே தியாகராஜன் பேசியது எனக்கு உடன்பாடில்லை: ப.சிதம்பரம்

கராத்தே தியாகராஜன் அண்மையில் பேசியது, அவர் அளித்த பேட்டி ஆகியவற்றில் எனக்கு அறவே உடன்பாடில்லை என ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் நல்லுறவுக்கு அவை பாதகமானவை, அவை ஏற்புடையதல்ல என்பது என்னுடைய கருத்து என்றும், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியைச் சந்தித்து தியாகராஜன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அவரை அறிவுறுத்தி உள்ளேன் என்றும் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply