shadow

‘கம்யூனிஸ்ட் அரசின் கடைசி முதல்வர் பினராயி விஜயன்; எச்.ராஜா

கேரளாவில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி முதல்வர் பினராயி விஜயன் என்றும், அவருடைய ஆட்சியை அரபிக் கடலில் கரைக்காமல் ஓயமாட்டேன்’ என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆவேசமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டும், ஒருசில மாநிலங்களில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டும் இருக்கும் பாஜகவால் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் இன்னும் ஒரு எம்.எல்.ஏஐ கூட பெற முடியவில்லை.

இந்த நிலையில் கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் சபரிமலை பிரச்சனையை வைத்து காலூன்ற பாஜக முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன

இதனை உறுதி செய்வதை போல் சமீபத்தில் பினராயி விஜயன் ஆட்சியை கலைப்பேன் என்று அமித்ஷா பகிரங்கமாக பயமுறுத்தியதை அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா சமீபத்தில் அளித்த பேட்டியின்போது, ”கம்யூனிஸ்ட் அரசின் கடைசி முதல்வர் பினராயி விஜயன்; அந்த ஆட்சியை அரபிக் கடலில் கரைக்காமல் ஓயமாட்டேன்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

 

Leave a Reply