கமல் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை: காவல்துறை அறிவிப்பு
நிலவேம்பு கசாயம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதாக கமல் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இதுகுறித்து கமல் மீது வழக்கு பதிவு செய்ய போவதில்லை என்று காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மனுதாரர் தேவராஜன் அவர்களுக்கு காவல்துறை அனுப்பிய கடிதத்தில் ‘தங்களின் புகாரின் அடிப்படையில் கமல் மீது வழக்குப்பதிவு செய்து குற்ற நடவடிக்கை எடுப்பதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என்பதால் தங்களின் மனுவானது முடிக்கப்படுகிறது. இதுதங்களின் தகவலுக்காக தெரிவிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர் ஒருவர் கமல் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்யப்படும் என்று கூறிய நிலையில் தற்போது காவல்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.