shadow

மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்கை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2017ஆம் ஆண்டு தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டியளித்த போது மகாபாரதத்தில் பெண்ணை வைத்து சூதாடுவதை புத்தகமாக படித்துக் கொண்டிருக்கும் ஊரு இது என்று தெரிவித்திருந்தார்

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பலரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில் கமல்ஹாசன் மீது வள்ளியூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது

இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர் மீதான வழக்கை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது