கமல் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலுக்காக திமுக, அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல் பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அங்கு பிரசாரம் மேற்கொள்ளாமல் கமல் புறப்பட்டு சென்றார். இதனால் கமல் கட்சியின் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

Leave a Reply