கமல் கட்சியின் வேட்பாளர் ஆகிறாரா கஸ்தூரி?

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக ஏற்கனவே திமுகவு, அமமுகவும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. விரைவில் அதிமுகவும் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளது

இந்த நிலையில் டுவிட்டரில் ஒருவர் கமல்ஹாசனுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். நான்கு தொகுதிகளில் ஒன்றான சூலூர் தொகுதியில் நடிகை கஸ்தூரியை வேட்பாளராக அறிவித்துவிடுங்கள். அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்களை தோற்கடிக்க அவரால் தான் முடியும் என்று கூறியுள்ளார்.

இதற்கு நடிகை கஸ்தூரி, ‘ஆஹா நல்ல ஐடியா’ என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

 

 

Leave a Reply