கமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் பேசியுள்ளார். அவரது பேச்சுக்கு திரையுலகை சேர்ந்தவர்களே கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும், என்ன பேச வேண்டும் என்றே அவருக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.