கமல்ஹாசனை தூக்கில் போட்டு கொல்ல வேண்டும்: இந்து மகா சபா காட்டம்
கமல்ஹாசன் எழுதிய இந்து தீவிரவாதிகள் குறித்த கருத்து மழை வெள்ளத்தையும் தாண்டி டிரெண்டில் உள்ளது. கமல்ஹாசனுக்கு பாஜகவினர், இந்து மக்கள் கட்சியினர் உள்பட பலர் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் கமல்ஹாசனை சுட்டு கொல்ல வேண்டும் அல்லது தூக்கிலிட வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை இந்து மகாசபா அமைப்பின் துணைத்தலைவர் பண்டிட் அசோக்சர்மா கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து மகாசபா அமைப்பின் துணைத்தலைவர் பண்டிட் அசோக்சர்மா மேலும் கூறியதாவது: இந்து மத மக்களின் உணர்வுகளுக்கு எதிராக பேசுபவர்களுக்கு இந்த புனித மண்ணில் வாழ உரிமையில்லை. அவர்களுடைய கருத்துக்களுக்காக கொல்லப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு இதுவொரு பாடமாக அமையும்.
இந்து மதத்திற்கு எதிராக கருத்து கூறிய கமல்ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நடிக்கும் திரைப்படங்களை அனைத்து கட்சி உறுப்பினர்களும் புறக்கணிக்க வேண்டும். இந்து மத உணர்வுகளை புண்படுத்தியவர்களுக்கு மன்னிப்பே கிடையாது’
பண்டிட் அசோக்சர்மாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு கமல் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.