கமல்ஹாசனை காங்கிரசுக்கு அழைக்க மாட்டோம்: குஷ்பு
கமல்ஹாசனை காங்கிரசுக்கு அழைப்பது குறித்தும், அவருடைய அரசியல் நகர்வுகள் குறித்தும் நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான குஷ்பு கூறியதாவது:
நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே கேரள முதல்–மந்திரியை சந்தித்து இருக்கிறார். தற்போது டெல்லி முதல்–மந்திரியை சந்தித்து இருக்கிறார். ஒரு முதல்–மந்திரியே அவரை தேடிப்போய் சந்தித்து இருப்பதால், கமல்ஹாசனின் 30 ஆண்டுகால தோழி என்ற முறையில் எனக்கு பெருமையாக இருக்கிறது.
கமல்ஹாசன் பிற கட்சியில் சேருவதும், புதிய கட்சி தொடங்குவதும் அவரது விருப்பம். காங்கிரசுக்கு வாருங்கள் என்று அவரை நாங்கள் கூப்பிட மாட்டோம். குஷ்புவை நம்பியோ, கமலை நம்பியோ, ரஜினிகாந்தை நம்பியோ காங்கிரஸ் இல்லை. தனது கொள்கையை நம்பித்தான் இருக்கிறது.
கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கினால் அதில் நான் சேரமாட்டேன். அரசியலே வேண்டாம் என்று விலகினாலும், விலகுவேனே தவிர, இனி வேறு கட்சியில் சேர மாட்டேன். ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் எனது நிலைப்பாடு அதுதான். அரசியலில்தான் பேரும், புகழும் நான் அடைய வேண்டும் என்பதில்லை. ஏற்கனவே பணம், புகழ் எல்லாவற்றையும் பார்த்தவள் நான்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.