மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கடந்த இரண்டு நாட்களாக அடுத்த கட்ட சுற்றுப் பயணத்தை ஆரம்பித்து தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்

இந்த நிலையில் இன்று அவர் மாலை 4 மணிக்கு திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் அருகில் பிரசாரம் செய்ய உள்ளார். அதன் பிறகு சென்னை புத்தகக் காட்சிக்கு செல்லும் அவர் மாலை 7 மணிக்கு திருவொற்றியூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்

இந்த நிலையில் இன்று சென்னை புத்தக கண்காட்சியில் தான் உரை நிகழ்த்த போவதாக டுவிட்டரில் கமலஹாசன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது

இன்று மாலை 5 மணிக்கு சென்னை புத்தகக் காட்சி அரங்கில் “என் உரையிலும் நடையிலும் கலந்தவர்” எனும் தலைப்பில் உரையாற்றுகிறேன். வாய்ப்புள்ளவர்கள் வருக.

Leave a Reply