கமலுக்கு இந்த தைரியம் உள்ளதா? எச்.ராஜா கேள்வி

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய கமல்ஹாசனுக்கு இதனை சொல்ல தைரியம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட் இதுதான்:

திருநெல்வேலி மேலப்பாளையம் முஸ்லிம்கள் 1947 ஆகஸ்டு 14 அன்று பாக்கிஸ்தான் கொடியேற்றினர். சுதந்திர இந்தியாவின் முதல் தேசவிரோத செயல் அது என்று சொல்ல கமலுக்கு தைரியம் வருமா? அந்த முஸ்லிம்களும் அவர்கள் சந்ததியும் பாக்கிஸ்தானுக்கு போகவில்லை இங்குதான் உள்ளனர்’ என்று கூறியுள்ளார். இந்த டுவீட்டுக்கு கமல் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply