கபாலி, காலாவுக்கு பின் பாலிவுட் செல்லும் இயக்குனர் ரஞ்சித்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் அடுத்ததாக இந்தி படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் உருவான ‘பேயாண்ட் தி க்ளவுட்ஸ்’(Beyond the Clouds) என்ற படத்தை ஷரீன் மத்ரி மற்றும் கிஷோர் அரோரா ஆகியோர் தயாரித்திருந்தனர்.
இந்த தயாரிப்பாளர்கள் தான், பா.ரஞ்சித் இயக்கும் முதல் பாலிவுட் படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டியுள்ளனர். இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வரலாற்றுப் பதிவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.