கன்னியாகுமரியில் திடீரென சீற்றமடைந்த கடல்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கன்னியாகுமரி, திருச்செந்தூர் கடல் பகுதியில் திடீரென கடல் சீற்றம் கொள்வதும், பின்வாங்குவதும் அவ்வபோது நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரையில் உள்ள கிராமங்களில் இன்று திடீரென கடல் சீற்றம் அதிகமாகி கடல் அலைகள் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துவிட்டது

இதனால் சுனாமி வந்துவிட்டதாக அஞ்சிய அந்த பகுதி பொதுமக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்து கொண்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு சென்றனர்.

 

Leave a Reply