shadow

கனிமொழி முன்னிலையில் திமுகவினர் மோதல்: தூத்துகுடியில் பரபரப்பு

திமுக எம்பி கனிமொழி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துகுடி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதி செய்வது போல் சமீபகாலமாக அடிக்கடி தூத்துகுடியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிராமங்களில் திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டம் ஒன்று நடந்தது. இதில் நேற்று கனிமொழி எம்பி பங்கேற்றார். இதில் ஒரு கிராமமான மேல ஈரால் என்றா கிராமத்துக்கு அவர் சென்றபோது, நூறு நாட்கள் வேலை திட்டத்தில் லஞ்சம் வாங்குவதாக கிராம மக்கள் சிலர் புகார் கூறினர்.

உடனே, அந்த கிராமத்தின் கணக்கர், மைக்கை பறித்து, தன் மீது காழ்ப்புணர்ச்சியில் புகார் கூறுவதாக கூறினார். இதனால், இரு தரப்பினருக்கு இடையே மோதல் உருவானது. கனிமொழி தலையிட்டும், சமாதானமாகாததால், போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

Leave a Reply