கனிமொழி குற்றச்சாட்டுக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் பதில்
மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை என திமுக எம்பி கனிமொழி மற்றும் திருநாவுக்கரசரின் கேள்விக்கு, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும்,
விவசாயத்திற்கோ, சுற்றுச்சூழலுக்கோ இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் ஆனால் தற்போது 2 இடங்களில் மட்டும் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.