கனிமொழி இறக்குமதியானவர், நான் மண்ணின் சொந்தக்காரி: தமிழிசை

தூத்துகுடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் அவர் பேசியபோது, ‘என்னை பற்றிய விமர்சனங்களுக்கு அஞ்சமாட்டேன். நான் பனங்காட்டு நரி. கனிமொழி இறக்குமதி செய்யப்பட்டவர். ஆனால் நான் இந்த மண்ணின் சொந்தக்காரி. என்று பேசினார்

மேலும் தூத்துகுடி தொகுதியில் தனது வேட்புமனு நிராகரிக்க திமுகவினர் கூறிவருவது குறித்து கூறிய தமிழிசை, பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குனர் பதவியை முறையாக ராஜினாமா செய்துள்ளேன். திமுக புகார் பரிதாபம்? வெற்று வேலை’ என்று தெரிவித்தார்.

 

Leave a Reply