கனிமொழியை தகுதி நீக்கம் செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு

வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக எழுந்த புகாரையடுத்து தூத்துகுடி திமுக வேட்பாளர் கனிமொழியை தகுதியிழப்பு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த்தையும் தகுதிநீக்கம் செய்யக்கோரி அதே மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த வி. அப்துல்லா சேட், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த இந்த மனுவ் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரின் செயல்பாடுகள் ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை வைத்துள்ள என்னைப் போன்றவர்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்க செய்துள்ளது. இதனால் கனிமொழி, கதிர்ஆனந்த் ஆகியோரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதியிழப்பு செய்யக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு 5.4.2019-ல் மனு அனுப்பினேன் என இந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply