கனவில் கூட திமுக ஆட்சிக்கு வர முடியாது: செல்லூர் ராஜூ
திமுக ஆட்சிக்கு வருவதை, இனி கனவில் கூட காண முடியாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டுறவுத்துறை குறித்த ஆய்வுக்கூட்டத்தில், செல்லூர் ராஜூ, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு திமுக நூறு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.
எனவே இனிமேல் திமுக ஆட்சியை பிடிக்கும் என்பது கனவில் கூட நடைபெறும் காரியம் அல்ல என்று கூறினார். செல்லூர் ராஜூவின் இந்த கருத்துக்கு திமுகவினர் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.