கனமழை எதிரொலி: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருவதால் நேற்றும் இன்றும் ஒருசில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
நெல்லை மாவட்டத்தில் கனமழை விடுமுறையால் இன்று நடைபெற இருந்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.