shadow

கனமழை எதிரொலி: சென்னை பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை

நேற்று காலை முதல் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்து மிதமான, கனமழை பெய்து கொண்டிருப்பதால் இன்று சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் கனமழை காரணமாக வேலூர், திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்றும், திருவாரூரில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்றும் அம்மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார்.

 

Leave a Reply