shadow

கனமழை எதிரொலி: அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தாலும் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்ததால் சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில் சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று தொடங்கவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி சென்னை மாநிலக்கல்லூரி முதல்வர் பிரமானந்த பெருமாள் அவர்கள் கல்லூரியின் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இன்று நடைபெறவிருக்கும் சட்டப்பல்கலைகழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வுகளும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply