கனமழையிலும் பாதிப்பு இல்லாமல் இயங்கும் சென்னை மின்சார ரயில்
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மேலும் மழை காரணமாக டிராபிக் பிரச்சனையும் அதிகளவில் உள்ளது.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு மழை நேரத்தில் எப்போதும்போல் ஆதரவு கொடுத்து வருகிறது மின்சார ரயிலும், மெட்ரோ ரயிலும் தான். சென்னையில் கனமழை பெய்த போதிலும் மின்சார ரயில், மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே சாலை வழியே செல்வதை பலர் தவிர்த்து ரயில்களை உபயோகித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.