கனமழையால் இன்றும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: எந்தெந்த மாவட்டங்கள்?

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நேற்றும் இன்றும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் நேற்றை போலவே இன்றும் ஒருசில மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது

இதன்படி கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அவர்கள் அறிவித்துள்ளார்.

அதேபோல் திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர், பன்றிமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் சென்னையில் நேற்றிரவு முதல் மிதமான மற்றும் கனமழை பெய்து கொண்டிருந்தபோதிலும் சென்னையில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply