shadow

opsதமிழ்நாட்டின் புதிய முதல்வராக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2வது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்கும்போது அவரது கண்கள் கலங்கியதாக கூறப்படுகிறது.

கவர்னர் மாளிகையில் இன்று நடைபெற்ற ஒரு எளிய நிகழ்ச்சியில் கவர்னர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை அடுத்து நத்தம் விஸ்வநாதன், மோகன், வளர்மதி,எடப்பாடி பழனிச்சாமி, செந்தில் பாலாஜி, சம்பத், செல்லூ ராஜ், காமராஜ், தங்கமணி உள்ளிட்ட பல அதிமுக  எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் அரசு அதிகாரிகள், மற்றும் உயர்காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2001ஆம் ஆண்டு செம்படம்பர் மாதம் முதல் 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

Leave a Reply