கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து! அதிர்ச்சித் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று டர்பன் நகரில் 2வது டி20 போட்டி நடைபெற்றது

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு செய்ததால், இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 205 என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 19 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது இதனால் 6 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது

இந்த நிலையில் முதல் 4 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து விட்ட தென்னாப்பிரிகா, அடுத்த இரண்டு பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியின் டாம் குர்ரான் அபாரமாக பந்து வீசி கடைசி 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் தென்ஆப்பிரிக்கா அணி பரிதாபமாக 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

Leave a Reply