shadow

கடைசி ஓவரில் அசத்திய விஜய்சங்கர்: இந்தியா த்ரில் வெற்றி

இன்று நாக்பூர் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 11 ரன்கள் ஆஸ்திரேலிய அடிக்க வேண்டியிருந்த நிலையில் விஜய்சங்கர் அபாரமாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுக்கள் எடுத்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இன்றைய வெற்றியால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 250/10 48.2 ஓவர்கள்

விராத் கோஹி: 116 ரன்கள்
விஜய்சங்கர்: 46

ஆஸ்திரேலியா: 242/10 49.3 ஓவர்கள்

ஸ்டோனிஸ்: 52 ரன்கள்
ஹேண்ட்ஸ்காம்ப்: 48 ரன்கள்

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி

இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி மார்ச் 8ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறும்.

Leave a Reply