கடலுக்கு சென்ற 5 மீனவர்கள் மாயம்
வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் இருந்து நாட்டுப்படகில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 5 பேர் மாயமாகியுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் மீன்பிடிக்க கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது
இந்த நிலையில் இந்த எச்சரிக்கைக்கு முன்னரே நேற்று கடலுக்குள் சென்ற மீனவர்களில் ஐந்து பேரை தற்போது காணவில்லை. அவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.