கடலில் நீந்த சென்ற நபர் திடீர் மாயம்: கை மட்டுமே கிடைத்ததால் பரபரப்பு

கடலில் நீந்த சென்ற 44 வயது நபர் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார். அவருடைய கை மட்டும் கரை ஒதுங்கியதால் அவரை சுறா மீன் கடித்து தின்று இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது

பிரிட்டனைச் சேர்ந்த தம்பதிகள் சமீபத்தில் ஸ்காட்லாந்தில் உள்ள ரீயூனியன் என்ற பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அங்கு உள்ள கடலில் இருவரும் மகிழ்ச்சியாக குளித்து விளையாடிய போது திடீரென அந்த நபர் மட்டும் காணாமல் போனார்

இது குறித்து அவருடைய மனைவி சத்தம் போட்டு தனது கணவரை அழைத்தும் எந்த பயனும் இல்லை. உடனடியாக காவல்துறை மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு மீட்பு படையினர் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் காணாமல் போன நபரைத் தேடினர். ஆனால் துரதிஷ்டவசமாக அவரை பல மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை

இதனை அடுத்து சில மணி நேரங்கள் கழித்து காணாமல் போன நபரின் மட்டும் கரை ஒதுங்கியது. அவருடைய கை விரலில் திருமண மோதிரம் இருந்ததை அடுத்து அவரை அடையாளம் காணப்பட்டார் கடலில் மூழ்கி அவரை சுறா மீன் கடித்து தின்று இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

Leave a Reply