கஜா புயல் நிவாரண நிதி: ரூ.1146.12 கோடி அறிவித்த மத்திய அரசு
சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலால் பல உயிர்களும் கோடிக்கணக்கான மதிப்பிலானா பொருட்களும் சேதமடைந்த நிலையில் ஏற்கனவே தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கி நிவாரண பணிகளை கவனித்து வருகிறது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய குழு கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டது. இதனையடுத்து தமிழக அரசு கேட்ட ரூ.15 ஆயிரம் கோடியில் பெருமளவு பணத்தை மத்திய அரசு ஒதுக்கும் என எத்ரிபார்க்கப்பட்டது.
ஆனால் சற்றுமுன் வெளியான தகவலின்படி கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1146.12 கோடி நிவாரண தொகையாக அறிவித்தது மத்திய அரசு. தமிழக அரசு ரூ.15000 கோடி கேட்ட நிலையில் வெறும் ரூ.1146.12 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.