கஜா புயல் நிவாரணத்திற்காக நளினி கொடுத்த தொகை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் 7 பேர்களில் ஒருவராகிய நளினி, கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கியுள்ளார்.
நளினி சிறையில் இருந்தபோது துணிகள் தைத்ததால் கிடைத்த வருமானத்தில் இருந்து இந்த தொகையை கொடுத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி சிறையில் சம்பாதித்த ரூ.1000 பணத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
நளினி கொடுத்த இந்த நிவாரண தொகையை பெற்றுக் கொண்ட சிறை அதிகாரிகள் முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.