shadow

கஜா புயல்: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் இன்று மாலை கடலூர்-பாம்பன் இடையே இன்று கரையை கடக்கும் என சென்னாஇ வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து இன்று நடைபெறுவதாக இருந்த காரைக்குடி அழகப்பா பல்கலை., பாரதிதாசன் பல்கலை., திருவள்ளுவர் பல்கலை. உறுப்பு கல்லூரிகள் மற்றும் திருவாரூர் மத்திய பல்கலை.யில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே

இதேபோல் இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலை நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply