shadow

கஜா புயலால் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா?: செங்கோட்டையன் பதில்

கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களில் வீசிய கஜா புயல் அதனையடுத்து பெய்த கனமழையால் பெரும்பாலான பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இம்மாதம் நடைபெறும் அரையாண்டு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி மாணவர்களிடையே எழுந்தது

இந்த நிலையில் கஜா புயல் பாதித்த பகுதிகளில், திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு, பாடங்களில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் கூறினார்.

Leave a Reply